அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவிற்கு விஜயம் வெள்ளை மாளிகை அறிவிப்பு
Sep 03, 2023 63 views Posted By : YarlSri TV
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவிற்கு விஜயம் வெள்ளை மாளிகை அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதியில் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் 7 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும் இந்திய பிரதமர் மோடியுடன் 8 ஆம் திகதி ஜோ பைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாகவும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பார் எனவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டில் ஜோபைடன், ஏனைய உறுப்பு நாட்டு தலைவர்களுடன் தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.
பைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago