Skip to main content

பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்

Aug 28, 2023 52 views Posted By : YarlSri TV
Image

பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார் 

மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிவந்த பொலிஸ் உத்தியோகத்தரே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



உயிரிழந்தவர் மாத்தறை, கெகுணுதுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரென தெரியவந்துள்ளது.



அவர் இன்று காலை தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை