Skip to main content

கரை ஒதுங்கியுள்ள 20 கடலாமைகள்!

Aug 25, 2023 47 views Posted By : YarlSri TV
Image

கரை ஒதுங்கியுள்ள 20 கடலாமைகள்! 

கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் இந்துருவ ஆகிய கடற்கரையோரங்களில் இருந்து இந்த இறந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையோரத்தில் மூன்று நாட்களுக்குள் சுமார் 20 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.



டலின் அடிப்பாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஆமைகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த ஆமைகளின் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.



இறந்த அனைத்து ஆமைகளும் ஒரே அளவு மற்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று இதற்கிடையில், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) வெளிப்படுத்தியுள்ளது.



மேலும், மேற்படி கடல் பகுதிகளில் உள்ள நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் நாரா அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை