குவைத்திலிருந்து தனது சம்பள நிலுவையைப் பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய இலங்கைப் பெண்!
Aug 24, 2023 46 views Posted By : YarlSri TV
குவைத்திலிருந்து தனது சம்பள நிலுவையைப் பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய இலங்கைப் பெண்!
அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400 ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா டெலிகா என்ற இலங்கைப் பெண்ணே இன்று (24.08.2023) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜெனிட்டா டெலிகா என்ற 46 வயதான காலி - கோனாபினுவில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு மிகப் பெரிய சம்பளப் பாக்கியை பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக குவைத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
அந்த நாட்டில் பாடசாலை ஆசிரியையான பெண் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இவர் ஆசிரியையான எஜமானியால் பலத்த துன்புறுத்தலுக்கு உள்ளாகினார். 'அந்த வீட்டின் உரிமையாளரான பெண் எப்போதும் என்னை அடிப்பார். 'எனக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை'. என ஜெனிடா டெலிகா கூறுகிறார்.
இதுபற்றி அம்மாவிடம் தெரிவித்தேன். அதன்படி, கடந்த (02.02.2022) அன்று அம்மா கொழும்பு வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இது தொடர்பில் முறையிடப்பட்டதனையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் அந்நாட்டுப் பொலிஸாருக்கு இதனை அறிவித்திருந்தனர்.
அப்போதும் குறித்த வீட்டிலேயே ஜெனிடா டெலிகா பணி புரிந்து வந்ததால் வீட்டின் உரிமையாளரை அந்நாட்டு பொலிஸார் அழைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.
அந்த வீட்டில் 3 வருடங்களும் 8 மாதங்களும் பணியாற்றிய ஜெனிடாவுக்கு ஒரு வருடமும் 3 மாதத்துக்குமான சம்பளமே வழங்கப்பட்டது.
பின்னர், இலங்கை தூதரக அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை அப்பகுதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, மீதமுள்ள சம்பள பாக்கியை வழங்குவதற்கு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதுவரை ஜெனிட்டா டெலிகா இலங்கை தூதரகத்துடன் இணைந்த வரவேற்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் தனக்கான பாக்கிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago