Skip to main content

பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி ஆவணங்களை வழங்கிய கிராம உத்தியோகத்தர் கைது!

Aug 23, 2023 36 views Posted By : YarlSri TV
Image

பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி ஆவணங்களை வழங்கிய கிராம உத்தியோகத்தர் கைது! 

கண்டி மாவட்டத்தில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவரை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.



கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது .



இதன்படி  கண்டி பிரதேசத்துக்கு உட்பட்ட பிரிவு ஒன்றுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டிலேயே கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை