Skip to main content

நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

Aug 22, 2023 44 views Posted By : YarlSri TV
Image

நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.  

பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொத்துவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



 இந்த நிலையில் காணாமல்போன நபரை தேடும் பணியில் கடற்படை, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர் பாலமுனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை