கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்! தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
Aug 12, 2023 69 views Posted By : YarlSri TV
கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்! தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
இந்த வாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த சீன போர்க்கப்பலை இந்தியா கண்காணித்து வருகிறதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இது ஒரு போர்க்கப்பலா இல்லையா என்பது தெரியவில்லை. நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் இந்தியா கவனமாக கண்காணிக்கிறது.
இந்தியா தனது பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.
சீன போர்க்கப்பலான HAI YANG 24 HAO ஆகஸ்ட் 10ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்த நிலையில் இன்று (12.08.2023) கொழும்பில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தென் இலங்கை துறைமுகமான ஹம்பாந்தோட்டைக்கு வந்தமை இந்தியாவிடம் இருந்து கடுமையான எதிர்வினைகளை எழுப்பியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago