இன்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்!...
Apr 22, 2023 105 views Posted By : YarlSri TV
இன்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்!...
ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். ஒரு மாதகால நோன்பு காலம் நிறைவடைந்த நிலையில் இன்று ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ஜீம்மா மசூதிக்கு சுமார் 1 லட்சம் பேர் புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர். அங்கு ரமலான் சிறப்பு தொழுகையில் அவர்கள் ஈடுப்பட்ட பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். டெல்லி நாடாளுமன்ற சாலையில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகையில் ஈடுப்பட்டனர். இதில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்று தொழுகையில் ஈடுப்பட்டனர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள களூர் சர்வதேச மைதானத்தில் ரமலான் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி தொழுகையில் ஈடுப்பட்டனர். இதில் நடிகர்கள் மாமூட்டி, அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள மசூதியின் வளாகத்தில் ரமலான் தொழுகையையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து வந்து ஒன்றுகூடி தொழுகையில் ஈடுப்பட்டனர். பின்னர், சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அவர்கள் வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் ரெட் ரோடு பகுதியில் ரமலான் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உலக அமைதியை வேண்டி ஏராளமானோர் அங்கு கூடி வழிப்பட்டனர். அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி இதில் பங்கேற்றனர். இதில் பேசிய மம்தா பானர்ஜி நாட்டில் அமைதியை நாம் அனைவரும் விரும்புவதாக கூறினார். நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago