Skip to main content

முல்லைத்தீவில் பாம்பு கடிக்கு இலக்காகிய மாற்றுத்திறனாளி பலி

Apr 17, 2023 58 views Posted By : YarlSri TV
Image

முல்லைத்தீவில் பாம்பு கடிக்கு இலக்காகிய மாற்றுத்திறனாளி பலி 

முல்லைத்தீவு - கிழவன் குளம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.



முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை குற்றுயிராய் கிடந்த பாம்பினை கையினால் தூக்கிய போது, பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.



இதையடுத்து, குறித்த நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) இரவு உயிரிழந்துள்ளார்.



மாங்குளம் - கிழவன் குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47)என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை