Skip to main content

இளைஞனின் இரு கால்களும் துண்டான சோக சம்பவம்

Apr 12, 2023 66 views Posted By : YarlSri TV
Image

இளைஞனின் இரு கால்களும் துண்டான சோக சம்பவம் 

கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி நேற்று (11) மாலை பயணித்த “காலி குமரி” புகையிரதத்தில் இருந்து  தவறி விழுந்த ஒருவரின் இரு கால்களும் துண்டானதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.



மிரிஸ்ஸ உடுப்பில பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.



குறித்த புகையிரதம் காலி புகையிரத நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர் தள்ளப்பட்டதில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



புகையிரதம் நின்றதும் அங்கிருந்தவர்கள் அவரை புகையிரத நடைமேடைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அதற்குள் அவரது இரண்டு கால்களும் முற்றிலும் துண்டாகி இருந்தன.



பின்னர் “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் ஊடாக அவர் கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


Categories: இலங்கை
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை