உகண்டாவில் ராஜபக்ஷர்களின் பணம்! நாமல் வெளியிட்ட செய்தி
Apr 09, 2023 67 views Posted By : YarlSri TV
உகண்டாவில் ராஜபக்ஷர்களின் பணம்! நாமல் வெளியிட்ட செய்தி
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் பணத்தினை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாளுக்கு நாள் எம்மை குறை கூறுகின்றனர். மத்தள விமான நிலையம் பற்றி பேசுகிறார்கள். மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியம் செய்தால் எங்கே விமானங்கள் வந்து இறங்க முடியும்? விமானத்திற்கு தேவையான எரிபொருளை எவ்வாறு பெற்றுக் கொள்வது? எரிபொருளுக்கு பதிலாக நெல்லை நிரப்புவதா?
போர்ட் சிட்டி அபிவிருத்தி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தினார்கள். காரணம் தான் என்ன? ராஜபக்ஷர்கள் போர்ட் சிட்டி மூலம் ஊழல் செய்ததாக கூறுகின்றனர். விசாரணைகள் செய்து செய்து விடுவிக்கப்பட்டு மீண்டும் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
தாமரை கோபுரத்தின் பணிகளையும் இடைநிறுத்தினர். அதிலும் ராஜபக்ஷர்கள் ஊழல் செய்ததாக தெரிவித்தனர். பின்னர் அதுவும் பொய்யானது.
அதேபோன்று ராஜபக்ஷக்கள் உகாண்டாவிற்கு பணம் கொண்டு சென்றிருப்பதாக கூறுகின்றனர்.
அப்படி நடந்திருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்..” என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago