Skip to main content

மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Sep 23, 2022 69 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்! 

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற பெண்கள் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை அமர்வின்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரை அவமதிக்கும் வகையில் உறுப்பினர் ஒருவர் கருத்த தெரிவித்ததைக் கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மகளிர் அரசார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் பெண்கள் மற்றும் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சில பெண்களும் இதில் கலந்துகொண்டனர்.



இந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ் மற்றும் பெண்கள் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினருக்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் இவ்வாறான உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை