Skip to main content

சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீடிக்க தீர்மானம்

Sep 15, 2022 72 views Posted By : YarlSri TV
Image

சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீடிக்க தீர்மானம் 

சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பதற்கு மோட்ட வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. 



மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம்  வழங்குவதற்கான அட்டை கையிருப்பில் குறைவாக இருப்பதன் காரணமாக ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையிலான சாரதி அனுமதி பத்திரமொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விநியோகித்து வருகிறது.



இவ்வாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டிருந்த 6 மாத காலத்திற்கு செல்லுபடியான வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தையே ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகக் கூடியதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாவதுஇ



'இதற்காக மாவட்ட செயலகங்களில் பிலியந்தலையில் உள்ள  வேரஹெர அலுவலகத்திற்குச் சென்றுஇ ஆறு மாத செல்லுபடி காலத்தை ஒரு வருட காலமாக நீட்டித்துக் கொள்ளலாம்.



வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு மாத்திரமே  கையிருப்பிலுள்ள அட்டைகளைக் கொண்டுஇ மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வாகன சாரதி அனுமதிப் பத்திர அட்டை புதிதாக விநியோகிக்கப்பட்டு வருகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 



அச்சிடப்பட்ட 450இ000 அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் கிடைக்கும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை