ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்
Jun 10, 2022 83 views Posted By : YarlSri TV
ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்
இராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன்
ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் தினமும் 100 முதல் 200 இராணுவ வீரர்களை உக்ரைன் இழப்பதாக அmரச தலைவர் ஜெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் மைக்கைலோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த தாக்குதலில் ரஷ்யா அணு ஆயுதங்களை தவிர்த்து அதன் கனரக பீரங்கிகள், பல ரொக்கெட் ஏவுதல் அமைப்புகள்(multiple rocket launch systems)மற்றும் விமானப்படை தாக்குதல் என அனைத்து ஆயுதங்களையும் உக்ரைன் மீது வீசுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் டான்பாஸ் பகுதியை முழுவதுமாக கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய வீரர்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதனால் உக்ரைன் வீரர்கள் தினம் தினம் இடைவிடாத குண்டு வெடிப்புகளுக்கு கீழ் உக்ரைனை பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஆயுதங்களுடன் ஓப்பிடுகையில் இது “சமநிலையின் முழுமையான பற்றாக்குறை” எனவும், அதனால் உக்ரைனுக்கு கூடுதலான ஆயுதங்களை மேற்கத்தய நாடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதன் அடிப்படையில் ரஷ்யாவுடன் சமன் செய்வதற்கு உக்ரைனுக்கு கூடுதலாக 150 முதல் 300 ரொக்கெட் ஏவும் அமைப்புகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை
அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசிய மைக்கைலோ போடோல்யாக், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றபட்ட அதன் நிலபரப்புகளை திரும்பி அளித்துவிட்டு, பெப்ரவரி 24ம் திகதிக்கு முந்திய நிலைகளுக்கு ரஷ்ய படைகள் திரும்பினால் மட்டுமே உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தரும் என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago