பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது
Jun 07, 2022 107 views Posted By : YarlSri TV
பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது
40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 117,000 கனேடிய டொலர்களையும் 19,000 யூரோக்களை பாதுகாப்ப அதிகாரிகள் கைப்பறியுள்ளனர். 45 வயதான இந்திய வர்த்தகரான குறித்த பயணி வர்த்தக நிமித்தம் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு செல்லவிருந்தார்.
10 ஆயிரம் ரூபா அபராதம்
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக அவருடன் இருந்த வெளிநாட்டு நாணயங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், வெளிநாட்டு நாணயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago