Skip to main content

ஜனாதிபதியின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது-கே.டி. லால்காந்த!

Oct 15, 2022 67 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதியின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது-கே.டி. லால்காந்த! 

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.



நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று ஹட்டனில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



மேலும் அவர் குறிப்பிடுகையில் தற்போதைய ஆட்சியாளர்களால் இந்நாட்டை ஆள முடியவில்லை.  அதனால்தான் மக்கள்மீது வரிச்சுமை திணிக்கப்படுகின்றதோடு ஒரிரு நாட்களுக்கு முன்னர்கூட புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது என தெரிவித்த அவர் இது ஆரம்பம் மட்டும்தான் அடுத்து வரும் நாட்களில் புதிய புதிய வரிகள் வரலாம்  எனவும் அவர் தெரிவித்தார்.



அதேவேளை மக்கள் எழுச்சியை அடக்குமுறை முறை ஊடாக கட்டுப்படுத்தி ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திவிடலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருதுகின்றார். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்காது என்பதோடு ஜனநாயக வழியில் நாம் பதிலலொன்றை எதிர்பார்க்கின்றோம். அதற்கான சிறந்த வழி தேர்தலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை