Skip to main content

வாயுத்தொல்லைக்கு அற்புத நிவாரணம்!

Oct 05, 2022 59 views Posted By : YarlSri TV
Image

வாயுத்தொல்லைக்கு அற்புத நிவாரணம்! 

சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால். இஞ்சி டீ செய்து அதில் வெல்லம் சேர்த்து குடிக்கதால் மூக்கு ஒழுகல் நின்றுவிடும்.



சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும்.



உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து அதனை தினமும் குடித்து வந்தால் அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து தொப்பையின் அளவை குறைத்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.



சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியே வராமல் தேங்கிவிட்டால் அதில் உள்ள கிருமிகளால் சிறுநீர் தொற்று ஏற்படும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு பொடியை சேர்த்து அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும்.



ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து அதை வடிகட்டி தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.



வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை