Skip to main content

விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் இடைநிறுத்தம்!

Oct 02, 2022 59 views Posted By : YarlSri TV
Image

விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் இடைநிறுத்தம்! 

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவுறித்தியுள்ளது.



நேற்று  முதல் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலுவை வைப்பு மற்றும் புதுப்பித்தல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியால் வர்த்தக வங்கிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.



அத்துடன் கடந்த மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, உரிய பணிப்புரைகள் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு நிலையான வைப்பாளர்களுக்கு 14.5 சதவீதமான வட்டி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது 15 சத வீத வட்டி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை