Skip to main content

ஒவ்வொருநாளும் துக்கத்துடன் கழிகின்றது – காணாமல்போனவர்களின் உறவுகள்!

Oct 01, 2022 88 views Posted By : YarlSri TV
Image

ஒவ்வொருநாளும் துக்கத்துடன் கழிகின்றது – காணாமல்போனவர்களின் உறவுகள்! 

எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்துடனேயே கழிப்பதாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.



சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் இலங்கை அரசிடம் ஏமாந்த நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கேட்டு தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். சர்வதசேமும் எங்களை ஏமாற்றாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 51 வது கூட்டத்தொடரிலாவது எமக்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிநிற்கின்றோம்.



எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொரு நாளையும் நாம் துக்கத்துடனேயே கழிக்கின்றோம். நாம் மகிழ்ச்சியாக இல்லை. எனவே எமது உறவுகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்ததுஎன்பதற்கான சரியான பதிலை சர்வதேசம் எமக்கு வழங்கவேண்டும்.இல்லாவிடில் எமது உறவுகள் வரும்வரைக்கும் நாம் போராடிக்கொண்டே இருப்போம். என்றனர்.



ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை