Skip to main content

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட திலீபனின் 35 ஆவது ஆண்டு

Sep 26, 2022 80 views Posted By : YarlSri TV
Image

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட திலீபனின் 35 ஆவது ஆண்டு 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.



யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.



பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனி காலை 10 மணி முதல் நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடைந்தன.



அதேவேளை கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்குக்காவடி எடுத்து தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.



இந்த அஞ்சலி நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக மலர் தூவிஇ விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை