நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்வு! அவசரகால சட்டம் அமுலில்!
Apr 04, 2022 88 views Posted By : YarlSri TV
நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்வு! அவசரகால சட்டம் அமுலில்!
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம், தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சனிக்கிழமை மாலை 06 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 06 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
காலையில் இடம்பெற வேண்டிய ரயில் சேவைகள் மற்றும் தூர இடங்களில் இருந்து இடம்பெறவேண்டிய பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. இதனால், அதிகாலையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.
பிரதான நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் காலைவேளையில் திறக்கப்படவில்லை. சில பஸ் நிலையங்களில் பயணிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அமைதி, பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago