Skip to main content

நீரிழிவு நோயாளிகள் சமைத்த உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் ?

Mar 23, 2022 94 views Posted By : YarlSri TV
Image

நீரிழிவு நோயாளிகள் சமைத்த உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் ?  

சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.



உப்பு சமைக்கப்படும் போது, இரும்பு அமைப்பு எளிமைப்படுத்தப்பட்டு, குடல் அதனை உறிஞ்சுவதற்கு எளிதாகிறது.



சமைக்கப்படாத உப்பைப் பொறுத்தவரை, இரும்பு அமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும் மற்றும் உடலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.



இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.  



உப்புக் குறைவாக சாப்பிடுவதும் ஆபத்தானதா?



அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர் டென்ஷனை ஏற்படுத்தும்.



அதே போல், உடலில் உப்பு பற்றாக்குறை மரண அபாயத்திற்கு வழிவகுக்கும்.



ஒரு ஆய்வின்படி, தேவையானதை விட குறைந்த அளவு உப்பை உண்பவர்களில் இருதய செயலிழப்பு மற்றும் மற்ற காரணங்களால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.



ஒருவர் எவ்வளவு உப்பு உட்கொள்ள வேண்டும்?



சுகாதார நிபுணர்கள் மற்றும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி உப்பை உட்கொள்ள வேண்டும்.



ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, 10 கிராம் உப்பு, அதாவது 4000 மில்லிகிராம் சோடியம் ஒரு பெரியவர் ஒரு நாளைக்கு உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.



உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ½ டீஸ்பூன் உப்புக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.



நீரிழிவு நோயாளிகளும் உப்பு விடயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகம் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு ½ டீஸ்பூன் உப்புக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.Gallery



 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை