Skip to main content

ஐபிஎல் லக்னோ அணி கொடுத்த ஆஃபரை மறுத்த இளம் வீரர்! ஏன் தெரியுமா?

Mar 23, 2022 75 views Posted By : YarlSri TV
Image

ஐபிஎல் லக்னோ அணி கொடுத்த ஆஃபரை மறுத்த இளம் வீரர்! ஏன் தெரியுமா? 

ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் மார்க் வுட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.



அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய லக்னோ அணி தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய லக்னோ அணி தீவிரம் காட்டி வருகிறது.



வங்கதேச வீரருக்கு அணிக்கு அழைப்பு



அதன்படி வங்கதேச அணியை சேர்ந்த டஸ்கின் அகமதுக்கு லக்னோ அணி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பினை அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து, வங்க தேச அணி தெரிவிக்கையில், வங்கதேச அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதையடுத்து, ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.



இதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் வங்கதேச அணி விளையாட இருக்கிறது. இந்த தொடரில் டஸ்கின் இடம்பெற்றதால் அவர் இடம்பெற மாட்டார்.



மறுத்த டாஸ்கின் 



ஐபிஎல் குறித்தும் பேசியிருந்தோம் ஆனால் அணியின் நலன் கருதி அதனை புரிந்துகொண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என கூறிவிட்டார் என தெரிவித்துள்ளார். முன்னதாக லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர், டஸ்கின் அகமது எங்கள் அணியுடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.



அப்படி அவர் இடம்பெறாத பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரை தவிர்த்து விட்டு லக்னோ அணியுடன் இணைவார் என கம்பீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை