ட்விட்டர் தொடர்பில் எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு!
May 28, 2022 116 views Posted By : YarlSri TV
ட்விட்டர் தொடர்பில் எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு!
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்(Elon Musk) தற்போது தாமதம் செய்து வருகிறார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் ட்விட்டர் முதலீட்டாள்ரகள், வாரிய நிர்வாகிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் வேண்டுமென்றே எலான் மஸ்க்(Elon Musk) தாமதம் செய்வது குறித்து அமெரிக்கப் பங்குச்சந்தை நிர்வாகிகள் எலான் மஸ்கிடம்(Elon Musk) விளக்கம் கோரியுள்ளனர்.
எலான் மஸ்க்(Elon Musk) ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் (Elon Musk)மறுத்துவிட்டார் அடுத்த சில நாட்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டொலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று எலான் மஸ்க்(Elon Musk) அறிவித்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டொலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க்(Elon Musk) பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் (Elon Musk)தெரிவித்தார்.
எலான் மஸ்க்(Elon Musk) ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறியபோது 12 சதவீதம் அதிகரித்த பங்குகள், தனது முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தபின் 27 சதவீதம் திடீரென சரிந்தன.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், ட்விட்டர் நிறுவனத்தைப் பற்றி தவறான தகவல் பரப்பியது, ட்விட்டர் நிர்வாகத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் எலான் மஸ்க் (Elon Musk) மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ட்விட்டர் முதலீட்டாளர்கள் சார்பில் வில்லியம் ஹெர்னியாக் (William Herniak)என்பவர் கிளாஸ் ஆக்ஸன் வழக்கு எலான் மஸ்க் (Elon Musk)மீது தொடர்ந்துள்ளார். அதாவது ஒரு குழுவில் பலர் பாதிக்கப்படும்போது அனைவரும் சார்பில் ஒருவர் வழக்குத் தொடர்வது கிளாஸ் ஆக்ஸன் வழக்காகும்.
அந்த வகையில் எலான் மஸ்க்(Elon Musk) மீது ட்வி்ட்டர் முதலீட்டாளர்கள் சார்பில் வில்லியம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago