Skip to main content

ஜப்பானில் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்திய சிறுவன்!

May 23, 2022 67 views Posted By : YarlSri TV
Image

ஜப்பானில் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்திய சிறுவன்! 

ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறுவனிடம் இவ்வளவு நன்றாக இந்தி பேச எங்கு கற்றாய்? என ஆச்சரியமுடன் அவர் கேட்டார்.



டோக்கியோ, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கிற குவாட் 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.



இந்த மாநாடு, இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வம் உள்ள உலகளாவிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்குகிறது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா(Fumio Kishida) அழைத்துள்ளார்.





பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden), ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ்(Anthony Norman Albanese) ஆகியோரும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.



இதற்காக பிரதமர் மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவர் இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். அவருக்கு தூதரக அதிகாரிகள் உள்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தங்கவுள்ள நியூ ஓட்டானி ஓட்டலுக்கு சென்றார்.



அவரை வரவேற்க இன்று காலை ஓட்டலுக்கு வெளியே குழந்தைகள் உள்ளிட்டோர் திரண்டிருந்தனர். அவர்களில் ரித்சுகி கோபயாஷி என்ற சிறுவன் இந்தி மொழியில் பிரதமரிடம் பேசியுள்ளான். ஆட்டோகிராப் வாங்குவதற்காக நான் வந்துள்ளேன் என பிரதமரிடம் கூறியுள்ளான்.



அந்த சிறுவன் இந்தியில் தங்கு தடையின்றி பேசியதில் ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி சிறுவனிடம், இவ்வளவு நன்றாக இந்தி பேச எங்கே கற்று கொண்டாய்? உனக்கு இந்தி நன்றாக தெரியுமா? என கேட்டார். இதன்பின்னர் சிறுவன் வைத்திருந்த அட்டையை வாங்கி அதில் கையெழுத்து போட்டு கொடுத்து, வாழ்த்தி விட்டு சென்றார்.



இதுபற்றி சிறுவன் ரித்சுகி கூறும்போது, நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் (பிரதமர் மோடி) நான் காகிதத்தில் எழுதியிருந்த செய்தியை வாசித்து பார்த்தார். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவரிடம் இருந்து கையெழுத்தும் வாங்கி கொண்டேன் என கூறியுள்ளான்.



பிரதமரின் 2 நாள் வருகையை முன்னிட்டு இந்திய வம்சாவளியினர் ஓட்டலின் முன் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹர் ஹர் மோடி, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட கோஷங்களையும் கேட்க முடிந்தது.  



Gallery Gallery


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை