Skip to main content

தலவாக்கலையில் இருந்து ஆரம்பமானது ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்பும் தனிமனித போராட்டம்!

May 03, 2022 80 views Posted By : YarlSri TV
Image

தலவாக்கலையில் இருந்து ஆரம்பமானது ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்பும் தனிமனித போராட்டம்! 

நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.



இந்த நடை பவனி இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.





 



இந்த தனிமனித நடைபவனி போராட்டம் காலிமுகத்திடலில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக இன்னும் மூன்று தினங்களில் சென்று அடையும் நோக்குடன் ஆரம்பித்துள்ளார்.



இன்று காலை தலவாக்கலை நகர மத்தியில் ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





 



அதனைதொடர்ந்து நடைபவனியாக சென்ற அவரை கொட்டகலை நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார். அவருடன் நகர மக்களும் உடனிருந்தனர். மாலை அணிவித்து, ஆசி வழங்கி அவரின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.



 



Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை