கடும் போர் பதற்றம்; கீவ் நகரில் ஊரடங்கு அமுல்! உதவிக்கரம் நீட்டும் உலகவங்கி
Feb 25, 2022 73 views Posted By : YarlSri TV
கடும் போர் பதற்றம்; கீவ் நகரில் ஊரடங்கு அமுல்! உதவிக்கரம் நீட்டும் உலகவங்கி
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் காரணமாக பொது போக்குவரத்து இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மெட்ரோ நிலையங்களை தங்குமிடங்களாக பொது மக்கள் 24 மணிநேரமும் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்யாவின் படையெடுப்பால் கடும் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தில் உக்ரைனுக்கு உலக வங்கி முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதாவது உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிலேச்சத்தமான தாக்குதலில் அச்சத்தின் பிடியில் உள்ள உக்ரைனுக்கு உலக வங்கியின் இந்த அறிவிப்பானது சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago