பிரான்ஸில் வாழும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Feb 21, 2022 75 views Posted By : YarlSri TV
பிரான்ஸில் வாழும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலின் போது வெளிநாட்டவர்கள் கடும் சிரமங்களுக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் வாழும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், பிரெஞ்சு மொழியில் உள்ள ஒன்லைன் தளங்களை அணுகுவதற்கு கடுமையாக போராடுவதாக பிரெஞ்சு உரிமைகள் பாதுகாவலர் என அமைப்பு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகள் பலருக்கும் நன்மையான விடயமாகும். ஏனெனில் இது விடயங்களை எளிதாக்குகிறது, ஆனால் இது அனைவருக்கும் நல்லதல்ல என குறித்த அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் 200க்கும் மேற்பட்ட சேவைகள் ஒன்லைனில் கிடைக்கின்றன, இதில் வரிகளை அறிவிப்பது, வெளிநாடுகளில் இருந்து வாக்களிப்பது, கல்லூரி அல்லது சாரதி அனுமதி பத்திரம் பதிவு செய்தல் அல்லது மரங்களை வெட்ட அனுமதி கேட்பது என அனைத்து விதமான விடயங்களும் உள்ளடங்குகின்றது.
2022 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைவதற்குள் 250 சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது சமத்துவமின்மையை உருவாக்குகிறது என பிரெஞ்சு உரிமைகள் பாதுகாவலர் அமைப்பின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரெஞ்சு மொழியில் மாத்திரம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு மக்களின் வாழ்க்கை கடினமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நமது சமூக ஒற்றுமை, நமது பொதுவான உணர்வுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் ஜனநாயக முறையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தங்களுக்கு இலகுவான மொழிகளை தெரிவு செய்து, டிஜிட்டல் சேவைகளை வெளிநாட்டு மக்கள் சேவையை பெறும் வகையில் சேவைகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
15 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
15 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
15 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
15 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
15 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
15 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago