ரவி பிஷ்னோய்க்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது - ரோகித் சர்மா கருத்து...
Feb 17, 2022 77 views Posted By : YarlSri TV
ரவி பிஷ்னோய்க்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது - ரோகித் சர்மா கருத்து...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
பிஷ்னோய் மிகவும் திறமையான பையன், அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன.
அவர் எந்த நிலையிலும் பந்துவீச முடியும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. போட்டியை நாங்கள் சீக்கிரம் முடித்திருக்க வேண்டும், இந்த வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் அவர்களை(வெஸ்ட் இண்டீஸ்) குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago