ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்துங்கள்: சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா
Mar 15, 2022 67 views Posted By : YarlSri TV
ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்துங்கள்: சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா
ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரித்துள்ளார்.
உக்ரைனின் மீது ரஷ்யா சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவின் போக்கு ரஷ்யாவின் பக்கம் சாய்ந்து வருவதை அமெரிக்கா மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் எச்சரித்து வந்ததை தொடர்ந்து, ரஷ்யாவிற்கு சீனா ஏதேனும் உதவிகளை செய்தால், அவர்கள் மீது புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் இரண்டாம் நிலை தடைகள் அமெரிக்கா முன்னெடுக்கும் என எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்க வணிக நிறுவனங்கள் ரஷ்யா மீது விதித்துள்ள வர்த்தக தடைகளை மீறி ரஷ்யாவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க உபகரணங்கள் மற்றும் மென்பொருளின் உதவிகளில் இருந்து துண்டிக்கப்படும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ கடந்த வாரம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும் சீனாவுடன் நாங்கள் நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதாகவும், இருப்பினும் ரஷ்யாவிற்கு சீனா ஏதேனும் உதவிகள் செய்ய முன்வந்தால் அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
சீனாவின் முன்னணி ராஜதந்திரியான யாங் ஜீச்சியை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் சந்தித்து பேசவுள்ள நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்!
-
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்!
-
யாழ் மாவட்டத்தில் தற்போது 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago