இறந்து போன தம்பியின் மடியில் மகளின் காதணிவிழா! அக்காவின் நெகிழ்ச்சி செயல்
Mar 15, 2022 102 views Posted By : YarlSri TV
இறந்து போன தம்பியின் மடியில் மகளின் காதணிவிழா! அக்காவின் நெகிழ்ச்சி செயல்
தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்து லட்சம் செலவு செய்து தம்பியின் மெழுகு சிலையில், மகளை வைத்து காது குத்து்ம் விழாவினை நடத்தியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பவர் சவுந்தரபாண்டி மற்றும் பசுங்கிளி தம்பதிகள். இவர்களுடைய மகன் பாண்டித்துரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள், மகனுக்கு காதணிவிழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இறப்பதற்கு முன்பு தனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் என்ற ஆசை தாய்மாமன் பாண்டித்துரைக்கு இருந்துள்ளது.
தனது குழந்தைகளுக்கு தாய்மாமனான பாண்டித்துரை இறந்து போனதால் அவரைப் போன்றே மெழுகு சிலையினை உருவாக்கி, மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினால் தனது தம்பியின் நீண்ட நாள் விரு்பத்தினை நிறைவேறியதாக கூறும் அவரது அக்கா, இதற்காக ஐந்து லட்சம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago