303 ரன்களில் டிக்ளேர்... இலங்கையின் வெற்றிக்கு 447 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா
Mar 14, 2022 77 views Posted By : YarlSri TV
303 ரன்களில் டிக்ளேர்... இலங்கையின் வெற்றிக்கு 447 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்ததுடன், கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தார். அத்துடன் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். இதேபோல் நீண்ட நேரம் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரவீன் ஜெயவிக்ரம 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லசித் எம்புல்தெனிய 3 விக்கெட் எடுத்தார்.இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதமுள்ளது. எனினும் விக்கெட்டுகளை காப்பாற்ற இலங்கை அணிகடுமையாகபோராடவேண்டியிருக்கும்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago