Skip to main content

உக்ரைன் இராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் தொடர்பில் வெளியான தகவல்!

Mar 13, 2022 110 views Posted By : YarlSri TV
Image

உக்ரைன் இராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் தொடர்பில் வெளியான தகவல்! 

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த மாணவர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



தமிழகத்தின் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த சுப்பிரமணியன்பாளையம் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ், உக்ரைனில் விமானவியல் படித்து வந்தார்.



இந்நிலையில் அங்கு ரஷ்ய- உக்ரைன் போர் உக்கிரமடைந்த சூழலில், பொதுமக்கள் ராணுவத்தில் இணையலாம் என அந்நாட்டு அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று, அந்நாட்டு ராணுவத்தில் சாய்நிகேஷ் இணைந்தார்.



இதுகுறித்து மத்திய, மாநில உளவுத்துறை அமைப்புகள் சாய்நிகேஷின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அவர் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருந்ததும் உயரம் குறைவு காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் போனதும் தெரியவந்தது.



எனவேதான் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக சாய்நிகேஷ் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் சாய்நிகேஷ் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தூதரக அதிகாரிகள் தங்களை பொறுமை காக்குமாறு கூறியுள்ளதாகவும் சாய்நிகேஷின் தந்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை