Skip to main content

மயிலாடுதுறையில் தொடரும் கடல் சீற்றம்... நிவாரணம் கேட்கும் மீனவர்கள்!

Mar 08, 2022 83 views Posted By : YarlSri TV
Image

மயிலாடுதுறையில் தொடரும் கடல் சீற்றம்... நிவாரணம் கேட்கும் மீனவர்கள்! 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி,பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு,வானகிரி உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.



ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையேற்றியும் வைக்கப்பட்டுள்ளது.



கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் கடல் அலைகள் சப்தத்துடன் கரையில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள, கருங்கல் தடுப்பு சுவரின் மீது மிகுந்த வேகத்துடன் மோதுகின்றன.



தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று, தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை