Skip to main content

வெகுண்டெழுந்து உக்ரைன் படையினர் கோரத்தாக்குதல்! கைப்பற்றிய நகரை விட்டு ஓடிய ரஷ்யப்படையினர்

Mar 07, 2022 76 views Posted By : YarlSri TV
Image

வெகுண்டெழுந்து உக்ரைன் படையினர் கோரத்தாக்குதல்! கைப்பற்றிய நகரை விட்டு ஓடிய ரஷ்யப்படையினர் 

ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உக்ரைனிலுள்ள முக்கிய நகரமான Chuhuivவை ரஷ்யா சமீபத்தில் கைப்பற்றியிரந்தது. இந்த நிலையில் விடா முயற்சியுடன் அந்த நகரை மீட்க போராடிய உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளது.



இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சில முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



உக்ரைனின் ஆயுதப் படைகளின் இந்த தொடர் தாக்குதலை ரஷ்ய வீரர்கள் சமாளிக்க முடியாமல் நகரை இழந்துள்ளனர்.



இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்களை விட ரஷ்ய வீரர்களே பல மடங்கு உயிரிழப்புகளையும் காயங்களையும் சந்தித்துள்ளனர்.



கார்கிவ் நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் Chuhuiv நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை