சூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை!
Mar 06, 2022 68 views Posted By : YarlSri TV
சூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை!
வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
வடையில் ஏகப்பட்ட வகைகள் உண்டு.
சூடான மசால் வடையை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- கடலை பருப்பு -1 கப்
- கொத்தமல்லி -சிறிதளவு
- மஞ்சள் தூள் -தேவையான அளவு
- கறிவேப்பிலை -தேவையான அளவு
- புதினா இலை -தேவையான அளவு
- பச்சை மிளகாய் -தேவையான அளவு
- இஞ்சி -சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊறிய பருப்பு மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
அரைக்கும் பொழுது பருப்பை முழுவதுமாக அரைத்துவிட கூடாது கொஞ்சம் கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, புதினா இலை, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை ஆகியவை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு மாவை தட்டி கடாயில் போட வேண்டும். பொன்னிறமாக மாறும் வேளையில் வடையை எடுத்தால் சூடான மொறு மொறு மசால் வடை ரெடி.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago