மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - தானும் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு
Mar 06, 2022 76 views Posted By : YarlSri TV
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - தானும் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவிருகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு மனைவியை கொலை செய்ததுடன் வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பன்கொல்ல, இப்பாகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago