Skip to main content

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம் - கவலையில் ரசிகர்கள்

Mar 04, 2022 77 views Posted By : YarlSri TV
Image

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம் - கவலையில் ரசிகர்கள் 

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வு ஒன்று நடக்கவுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 



இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.



இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கவுள்ளது. இப்போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது போட்டி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. 



புதிய கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியில் நடக்காத சம்பவம் ஒன்று இன்று நடக்கவுள்ளது. 



அதாவது இலங்கை அணிக்காக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இடம் பெறவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்த இவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி சாதிக்குமா அல்லது சறுக்குமா என்ற கவலை ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை