ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் விடுதலை!
Sep 30, 2021 164 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் விடுதலை!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்ரீலால் அரிண்டா (வயது 50). இந்தியரான இவர் அங்கு மருத்துவ பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 14-ந்தேதி வழக்கம் போல கடைக்கு சென்ற இவரை, கடைக்கு அருகே வைத்து மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். துப்பாக்கி முனையில் அரங்கேற்றப்பட்ட இந்த கடத்தல் சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லியில் வசித்து வரும் பன்ஸ்ரீலால் அரிண்டாவின் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில், அவரை மீட்பதற்கு மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வந்தது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சியமைத்து உள்ளதால், பன்ஸ்ரீலாலின் கதி என்ன? என்பது தெரியாமல் அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா நேற்று காலையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது தனது மூத்த சகோதரர் அசோக் லாலுடன் இருப்பதாக இந்திய உலகம் மன்றத்தின் தலைவர் புனீத் சிங் சந்தோக் தெரிவித்து உள்ளார்.
இது பன்ஸ்ரீலாலின் குடும்பத்துக்கு பெருத்த நிம்மதியை கொடுத்து உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago