Skip to main content

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

Feb 04, 2022 82 views Posted By : YarlSri TV
Image

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு 

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதன்படி, 480 அதிகாரிகளும், 8,034 இராணுவ வீரர்களும் பதவிக்கு உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.



இராணுவத்தின் 480 அதிகாரிகள் மற்றும் 8034 மற்ற ஏனைய தரநிலைகளை கொண்டவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.



இதன்படி, 7 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாகவும், 16 கேணல்கள் பிரிகேடியர் தரமாகவும், 36 லெப்டினன்ட் கேணல்கள் கேணல் தரமாகவும், 50 மேஜர்கள், லெப்டினன்ட் கேணல் தரமாகவும், 207 கப்டன்கள் மேஜர் மற்றும் லீ ஆகவும் பதவி உயர்வு பெற்றனர்.480 இராணுவத்தினர் லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.



ஜெனரல் சவேந்திர சில்வா 2019 ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் திகதி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் பெருமளவிலான அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை