197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு! தொடர்பில் அறிவிப்பு வெளியானது....
Feb 03, 2022 90 views Posted By : YarlSri TV
197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு! தொடர்பில் அறிவிப்பு வெளியானது....
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (04) கொண்டாடப்படவுள்ள 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும் கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும் களுத்தறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளனர்.
போகம்பறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலிருந்து தலா 11 கைதிகளும் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கும் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று காலை ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மனிதாபிமான அடிப்படையில் ராமநாயக்கவுக்கு நாளை மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
ரஞ்சன் ராமநாயக்க தனது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்ததால் அவர் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பட்டியல்கள் தங்களின் அறிவின்படி இணங்கப்பட்டுள்ளதாக பிரேமதாச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாயக்க இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்க தகுதியானவர் என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago