Skip to main content

நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன்:

Jan 26, 2022 116 views Posted By : YarlSri TV
Image

நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன்:  

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த சிறுவன் தனது தங்கையை கடைசியாக கொஞ்சி விளையாடிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பலரின் கண்களில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.



கடந்த 21ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார்.



பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவன் பாத்திமா என்ற பெண்ணின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.



ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் சிறுவனை பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, நைசாக பேசி செயினையும் கழற்றியுள்ளார்.



பின்பு தனது கணவருடன் சேர்ந்து தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை பீரோவில் அடைத்துவைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பாத்திமாவும், அவரது கணவர் சரோபியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசியாக சிறுவன் தனது தங்கையை மடியில் வைத்து கொஞ்சியுள்ள காணொளி இணையத்தில் வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை