Skip to main content

மிக மோசமான கட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமானம் நிலையம்!.

Jan 21, 2022 91 views Posted By : YarlSri TV
Image

மிக மோசமான கட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமானம் நிலையம்!. 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.



மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 6 பேர் இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.



கடந்த காலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார பிரிவுகளிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும் இந்த விடயம் தொடர்பில் பெரிதாக ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.



கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் சுகாதார பாதுகாப்பை மீறி செயற்படுகின்றார்கள்.



முகக்கவசம் அணிவதில்லை. அத்துடன் சுகாதார பரிசோதகர்களுக்கு ஓய்வு பெற அறையில்லாத நிலைமை ஒன்று காணப்படுகின்றது.



இவ்வாறான விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கடமையில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை