Skip to main content

மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு

Jan 11, 2022 103 views Posted By : YarlSri TV
Image

மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு 

நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் விநியோக துண்டிப்புக்கான தயார் நிலைகள் காணப்படுவதால், மக்கள் மெழுகுவர்த்திகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளமை இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.



அதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் மெழுகுவர்த்திகளும் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என மின்சார சபையின் கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.



சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், கிடைக்கும் மெழுகு கழிவுகள் மூலம் மெழுகுவர்த்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளதால், மெழுகுவர்த்தி தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை