Skip to main content

அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள் - ராகுல் காந்தி ஆவேசம்!

Dec 22, 2021 109 views Posted By : YarlSri TV
Image

அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள் - ராகுல் காந்தி ஆவேசம்! 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டுக்கு முன்னர்  'அடித்துக் கொலை’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டதே கிடையாது. நன்றி மோடிஜி என குறிப்பிட்டிருந்தார்.



இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் பேரணி நடத்தினர். அதன்பின், எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். 



அப்போது பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அடித்துக் கொலை சம்பவங்கள் குறித்தும், அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவு குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.



இதில், ஆத்திரமடைந்த ராகுல் காந்தி அவர்களை நோக்கி, அரசின் கைப்பாவையாக இருக்காதீர்கள். பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் என ஆவேசமாக பேசினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை