சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி!
Dec 17, 2021 81 views Posted By : YarlSri TV
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி!
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து பார்க்கையில் மாணவி ரத்தவெள்ளத்தில் கிடந்ததுடன் , தனது அருகில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து உடனடியாக குழந்தை மற்றும் மாணவியை மீட்ட பெற்றோர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அத்துடன் மாணவியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் மாணவி செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கர்ப்பிணி மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து அங்கேயே இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
16 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
16 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago