மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் பரிதாபம் பூகம்பம், வெள்ளத்தால் 18 பேர் பலி!
Sep 09, 2021 149 views Posted By : YarlSri TV
மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் பரிதாபம் பூகம்பம், வெள்ளத்தால் 18 பேர் பலி!
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும், பூகம்பமும் தாக்கியது. இதில், 18 பேர் பலியாகினர். மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டேர் அளவில் 7.1 புள்ளியாக இது பதிவானது.
அகாபுல்கோ நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் பூகம்பத்தின் மையம் இருந்தது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்து சாலைகளில் பாதுகாப்பாக நின்றனர். இந்த பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயமடைந்தனர்.
அதேபோல், டுலா என்ற நகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சப்ளை பழுதாகி நின்று விட்டது. இதனால், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 17 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago