ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் படுகொலை!...
Sep 14, 2021 132 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் படுகொலை!...
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கும், தாலிபான்களின் எதிர்ப்பு படையினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற போதிலும், அவர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், பஞ்சீர் வெளியில் தாலிபான்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் தாலிபான்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர், தாலிபான்களின் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்..
இதேவேளை, தாலிபான்களில் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் தொடர்ந்தும் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பொதுமக்கள் பாகிஸ்தானின் எல்லையில் கூடியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago