பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு!
Sep 04, 2021 149 views Posted By : YarlSri TV
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு!
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி டெல்லி சென்றார். நேற்று முன்தினம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அலுவலகத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்றார்.
இந்நிலையில், நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் கொடுத்தார்.
அதில் தெலுங்கானாவில் மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் மாநிலத்துக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதிச்சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றை அமைக்க வேண்டும், வாரங்கல் ஜவுளி பூங்காவுக்கு ரூ.1,000 கோடி மானிய உதவி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago