120 பேருடன் புறப்பட்ட இந்திய விமானம் ; ஆப்கானிலிருந்து இந்தியா வருவதற்கு விசா பெறலாம்!
Aug 17, 2021 183 views Posted By : YarlSri TV
120 பேருடன் புறப்பட்ட இந்திய விமானம் ; ஆப்கானிலிருந்து இந்தியா வருவதற்கு விசா பெறலாம்!
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமார் 120 பேருடன் இந்தியா புறப்பட்டது விமானம்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கும் தாலிபான் அமைப்புக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று தலிபான் அமைப்பு நாட்டை கைப்பற்றியது. இதனால் அங்கு வசித்து வந்த மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் தற்போது மீட்கப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்த 129 இந்தியர்கள் நேற்று ஏர் இந்தியா விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் நிலைமை கட்டுக்குள் இல்லாததால் காபூல் விமானநிலையத்தில் மற்ற நாடுகளை சேர்ந்த மக்கள் குவிய தொடங்கினர். இதனால் அங்கு கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதேசமயம்ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர், அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 120 இந்தியர்களுடன் டெல்லி புறப்பட்டது சிறப்பு விமானம். ஆப்கானிலிருந்து 129 இந்தியர்களை ஏற்கனவே தாயகம் அழைத்து வரப்பட்ட நிலையில் தற்போது 120பேர்களை அழைத்து வந்தது மத்திய அரசு. அத்துடன் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
அனைத்து தரப்பினரின் ஆலோசனையினைப் பெற்றே சகல கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் - கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ்
-
பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு! - நிந்தவூர் பகுதியில் சம்பவம்
-
யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு நடாத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்!
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago